தஞ்சாவூரில் 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கிய 5 ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை
2022-08-11@ 14:38:49

மதுரை: தஞ்சாவூரில் 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி நாராயணன் என்பவருக்கு தஞ்சாவூர் மாவட்ட சிறப்பு விரைவு நீதிமன்றம் வழங்கிய 5 ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் தெருவில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து மிரட்டியும், துன்புறுத்தியும் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைகளின் உடலில் இருந்த காயங்களை அறிந்து விசாரித்ததில் நாராயணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர் தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாராயணன் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் குற்றவாளியான நாராயணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் 9 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய 4 குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் தொந்தரவு செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. எனவே இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் குறிப்பிட்ட 5 ஆயுள் தண்டனையையும் உறுதி செய்கிறோம் என கூறி மனு தாரரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!