கோவையில் சட்டவிரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கு ரூ.373.74 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்பாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை..!!
2022-08-11@ 09:44:59

கோவை: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்பாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிந்துரை செய்துள்ளார். கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகளால் நீர் வழிப்பாதைக்கும், வன விலங்குகளில் வலசை பாதைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்த நிலையில் செங்கல் சூளைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்கள் சட்டவிரோதமாக செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி செங்கல் கொண்டு செல்லும் லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
சின்ன தடாகம், சோமயம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடையில் 177 செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள 177 செங்கல் சூளைகளுக்கு கடந்த ஆண்டு தீர்ப்பாயம் தடை விதித்தது. இந்நிலையில், செங்கல் சூளைகளில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் அளவினை கணக்கிட்டு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்பாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எல்லைப் பகுதியில் வருவாய்த்துறை சோதனைச்சாவடி அமைக்கப்படுமா? தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்' விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு
பொள்ளாச்சி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ‘ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்’: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழங்கல்
ஆபத்தை உணராமல் ஆழியார் அணை, ஆற்றுப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்: கண்காணித்து தடுக்க கோரிக்கை
குளித்தலை கடம்பன் துறையில் தைப்பூச திருவிழா: பட்டு போன மரத்தை அகற்றி சாலை சீரமைப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!