சிறுவன் ஓட்டி சென்ற பைக் மோதி 3 வயது சிறுமி பரிதாப பலி: தந்தை அதிரடி கைது
2022-08-10@ 03:07:35

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் சிறுவன் மற்றும் சிறுவனின் தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே விஜயமாநகரம் புது ஆதண்டார் கொல்லையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் மலர்விழி(3). இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக், மலர்விழி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே சிறுமி பலியானார். தகவலின் பேரில், அங்கு சென்ற மங்கலம்பேட்டை போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் சிறுவனின் தந்தையை கைது செய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். சிறுவனையும் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!