பழங்குடியின மக்களுக்காக கடைசி வரை போராடுவேன்; ராகுல் உருக்கம்
2022-08-10@ 00:20:25

புதுடெல்லி: புதிய விதிகள் மூலமாக பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சதி நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் புதிய வன பாதுகாப்பு விதிமுறைகள், பழங்குடியினர் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் மற்றவர்களை பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகின்றது. இந்நிலையில், சர்வதேச பழங்குடியினர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற லாபத்திற்காக புதிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை கொண்டு வந்து பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சதி நடக்கிறது. சர்வதேச பழங்குடியினர் தினத்தில் பழங்குடியின மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக எனது கடைசி மூச்சு வரை போராடுவேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசு நண்பர்களாக இருக்கும் ஒரு சில முதலாளிகளுக்காக மட்டும் செயல்படுகிறது என்பதை குறிக்கும் வகையில், ‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற வார்த்தையை ராகுல் பயன்படுத்தி வருகின்றார்.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!