வைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் நீர்திறப்பு அதிகரிப்பு; நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
2022-08-09@ 17:59:14

தேனி: வைகை அணை, சோத்துப்பாறை அணைகளில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரால் குளங்கள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடி எட்டிய நிலையில் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரப்பு வினாடிக்கு 2707 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3996 கன அடி நீர் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை அதன் முழு அளவான 126.28 அடியை கடந்த 3-ஆம் தேதி எட்டிய நிலையில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து அணையில் உபர் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 131 கன அடி வரும் நிலையில் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதை போன்று கிரிவலம் பகுதியில் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. மஞ்சளாறு அணைக்கு வரும் 46 கன அடி நீரும் மஞ்சளாற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
தமிழகத்தில் மூன்று முக்கிய அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் அதை சுற்றியுள்ள குளங்களும், கண்மாய்களும் நிரம்பி வருகின்றன. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றில் ரூ.100 கோடி உயர்மட்ட பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கோரி: சேலத்து இளைஞருக்கு குவியும் பாராட்டு
கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதி சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல பாதையில் விரைவில் ரயில் இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
கடந்த ஆட்சியில் தரமற்ற சீரமைப்பு பணிகள் பொலிவிழந்த விழுப்புரம் நகராட்சி பூங்கா: மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சிறுவர்கள் கோரிக்கை
உறை பனி கொட்டிய போதிலும் உறை பனி கொட்டிய போதிலும் ரோஜா பூங்காவில் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!