பைக் திருடிய 4 பேர் கைது: 9 இரு சக்கரவாகனம் பறிமுதல்
2022-08-09@ 00:06:24

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஊத்துக்கோட்டை தாலுக்கா ஏனாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுபாபு (29) இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் பொன்னேரி வரை சென்றார். அப்போது புதுவாயில் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தண்ணீர் அருந்துவதற்காக சென்று இருந்த நிலையில் அப்பொழுது அவருடைய இரு சக்கர வாகனம் திடீரென காணாமல் போனது. இது குறித்து மதுபாபு கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் கவரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் மற்றும் போலீசார் புதுவயல் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து வாலிபர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து சிசிடிவி காட்சிகள் கண்டெடுக்கப்பட்ட முகத்தைக் கொண்டு ஆரணி பேரூராட்சி சேர்ந்த நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து விசாரணை நடத்தியதில் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து சுமார் 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் ஆரணி பேரூராட்சி சேர்ந்த கார்த்திகேயன் (எ) கோழி கார்த்திக் (22),ரபீக்(22), அஜித்குமார் (எ) குமார்(19) ஆகாஷ் (எ) சிவா (22)ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் அனைவருமே ஒரே பள்ளியில் படித்த என்பது குறிப்பிடத்தக்கது . போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும் செய்திகள்
விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது: விருதுநகரில் பரபரப்பு
திருப்பூர் சம்பவம்: பீகாரை சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய 2 பேர் 3 பிரிவுகளில் கைது
சரக்கு ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது
கூடலூரில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி விற்ற 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது
கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!