ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்: முதல் முறையாக தங்கம் கண்டுபிடிப்பு
2022-08-08@ 14:52:53

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் முதற்கட்டமாக ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள், கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்டது. கடந்த 8 மாத காலமாக நடந்து வரும் அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அகழாய்வில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தால் ஆன 3 செ.மீ அளவிலான பட்டயம் கண்டெடுக்கப்பட்டது. வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் கூடிய அலங்கார கிண்ணம் பறவை வடிவத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 18 இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக இந்த பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் செய்திகள்
அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றில் ரூ.100 கோடி உயர்மட்ட பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கோரி: சேலத்து இளைஞருக்கு குவியும் பாராட்டு
கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதி சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல பாதையில் விரைவில் ரயில் இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
கடந்த ஆட்சியில் தரமற்ற சீரமைப்பு பணிகள் பொலிவிழந்த விழுப்புரம் நகராட்சி பூங்கா: மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சிறுவர்கள் கோரிக்கை
உறை பனி கொட்டிய போதிலும் உறை பனி கொட்டிய போதிலும் ரோஜா பூங்காவில் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!