மகாராஷ்டிரா அமைச்சரவை ஆகஸ்ட் 15-க்குள் விரிவாக்கம்: தேவேந்திர பட்னாவிஸ் தகவல்
2022-08-08@ 10:29:33

டெல்லி: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜக.வுடன் இணைந்து கடந்த ஜூன் 30-ம் தேதி புதிய அரசை ஆட்சியில் அமர்த்தினர். மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும் பதவியேற்றனர். ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அஜித் பவார் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறுகிறார். கடந்த காலத்தில் அவர்களின் ஆட்சியில் 32 நாட்களுக்கு வெறும் 5 அமைச்சர்கள் மட்டுமே ஆட்சி பொறுப்பில் இருந்ததை அஜித் பவார் மறந்து விட்டார். எனவே நீங்கள் கற்பனை செய்வதற்கு முன்பாகவே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கூறினார்.
இந்நிலையில் வரும் 15-ம்தேதிக்குள் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். மேலும் 15 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக்கம் செய்யப்படும் அமைச்சரவையில், உள்துறை தேவேந்திர பட்னாவிஸ் வசமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
Maharashtra Cabinet by August 15 expansion Devendra Fadnavis மகாராஷ்டிரா அமைச்சரவை ஆகஸ்ட் 15-க்குள் விரிவாக்கம் தேவேந்திர பட்னாவிஸ்மேலும் செய்திகள்
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முதன்முறையாக கமல் பங்கேற்பு: பிப். 2வது வாரம் ஈரோட்டில் பிரமாண்ட பொதுக்கூட்டம்
மதவெறி பித்து பிடித்து-மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு அநாகரிக அரசியலில் ஈடுபடுவதா? பாஜ தலைவர் அண்ணாமலைக்கு திமுக கண்டனம்
முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
திமுக மாணவர் அணி அமைப்பாளர்களுக்கு வரும் 4, 5 தேதிகளில் நேர்காணல்: செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ அறிவிப்பு
போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
திமுக சட்டத்துறையின் லோகோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!