யங் இந்தியா அலுவலகத்தில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத் துறை விசாரணை: 8 மணி நேரம் நடந்தது
2022-08-05@ 00:05:01

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் ஏற்கனவே பலமுறை விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, நேற்று முன்தினம் ‘யங் இந்தியா’ நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி சீல் வைத்தது. இந்நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் அமலாக்கத் துறை நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்த அவர், அமலாக்கத் துறை நடவடிக்கை கண்டித்து பேசியபோது, ‘சட்டத்தை புறக்கணிக்க மாட்டேன், சட்டத்தை மதித்து பின்பற்றுவேன்’ என கூறிவிட்டு நண்பகல் 12.20 மணிக்கு அங்கிருந்து சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘யங் இந்தியா’ அலுவலகத்துக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவரிடம் விசாரணையும் நடத்தினர். 8 மணி நேரத்துக்கு மேல் அவரிடம் விசாரணை நடந்தது.
Tags:
Young India Office Mallikarjuna Karke Enforcement Department Inquiry யங் இந்தியா அலுவலக மல்லிகார்ஜுன கார்கே அமலாக்கத் துறை விசாரணைமேலும் செய்திகள்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு
7 கட்சிகளின் ஆதரவுடன் 8வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் பதவியேற்பு: துணை முதல்வரானார் தேஜஸ்வி
புள்ளி வைத்த பாஜ; கோலம் போட்ட நிதிஷ் தாமரையை துளைத்தது அம்பு: புஸ்வாணமானது ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம்; மீண்டும் முருங்கை மரம் ஏற துடிக்கும் வேதாளம்
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
அசாமில் டிரோன் பைலட் பயிற்சி பள்ளி
ஏர்டெல் 5ஜி சேவை இம்மாதமே துவக்கம்: ஜியோவை முந்துகிறது
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!