வாகனங்கள் நீண்ட நேரம் நிற்பதை தடுக்க சுங்க சாவடிகளில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: ஒன்றிய போக்குவரத்து அமைச்சர் தகவல்
2022-08-04@ 00:11:05

புதுடெல்லி: மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கட்கரி பதிலளிக்கையில், ‘‘சுங்க சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண 2 திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒன்று செயற்கைகோள் அடிப்படையிலானது. இதில், காரில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் வாகனத்துக்கான சுங்க கட்டணம் கார் உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும். இன்னொன்று, பதிவு எண் பலகை தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். பதிவு எண் பலகை தொழில்நுட்பம் தான் சிறந்தது என்பது என்னுடைய கருத்தாகும்.
இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை. ஆனால் 6 மாதங்களுக்குள் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு பதிலளித்த கட்கரி, ‘‘அதிர்ஷ்டவசமாகவும், துரதிர்ஷ்டவசமாகவும் இந்தியாவின் சுங்க சாவடியின் தந்தையாக நான் கருதப்படுகிறேன். கடந்த 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் திட்டத்தின்கீழ் இந்தியாவில் முதல்முறையாக தானேவில் சுங்க சாவடி அமைக்கப்பட்டது,’’ என்றார்.
மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!