டைப்ரைட்டிங் தேர்வை பழைய முறைப்படியே நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு
2022-08-03@ 00:03:48

மதுரை: டைப்ரைட்டிங் தேர்வை பழைய நடைமுறைப்படியே நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு டைப்ரைட்டிங் - சுருக்கெழுத்து கணினி பயிற்சி மைய சங்கத் தலைவர் சோம.சேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ கடந்த 75 ஆண்டுகளாக டைப்ரைட்டிங் தேர்வு நடக்கிறது. தற்ேபாது இந்த நடைமுறையில் மாற்றம் செய்துள்ளனர். 2வது தாளை முதலாவதாகவும், முதல் தாளை இரண்டாவதாகவும் மாற்றியுள்ளனர். திடீரென மாற்றியுள்ளதால் தேர்வர்களின் திறன் பாதிக்கும்.
எனவே, இந்த தேர்வை முந்தைய நடைமுறையை பின்பற்றி நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஷாஜி செல்லன் ஆஜராகி, ‘‘இந்த நடைமுறை மாற்றத்தால் தேர்வர்கள் மனரீதியாக பாதிப்பதால், தேர்ச்சி விகிதம் குறையும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, சம்பந்தப்பட்ட தேர்வை பழைய நடைமுறைப்படி வழக்கம் போலவே நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!