கொசஸ்தலை ஆற்றில் கூலி ஆட்கள் வைத்து மணல் கடத்தல்; டி.எஸ்.பி அதிரடி சோதனையில் அம்பலம்
2022-08-02@ 02:38:29

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் கூலி ஆட்கள்வைத்து மூட்டைகளில் மணல் கடத்தப்படுவதாக திருத்தணி புதிய டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள விக்னேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று முன் தினம் இரவு பள்ளிப்பட்டு பஜார் வீதி அருகே கொசஸ்தலை ஆற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது ஆற்றில் மூட்டைகளில் மணல் நிரப்பிக் கொண்டிருந்த பெண்கள் ஓட்டம் பிடித்தனர். அப் பகுதியில் பதுக்கிவைத்த 60 மூட்டைகள் மணல் பறிமுதல் செய்து வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிப்பட்டில் வீடு கட்டி வரும் திமுக முக்கிய பிரமுகர் கூலி ஆட்கள் வைத்து ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் மணல் மூட்டைகளில் கடத்தி பயன்படுத்தப்படுவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மணல் கடத்தல் சம்பவங்கள் தடுக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருவதாக டி.எஸ்.பி விக்னேஷ் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!