குஜராத்தி, ராஜஸ்தானி சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்டார் மகாராஷ்டிரா ஆளுநர்
2022-08-02@ 00:13:59

மும்பை: குஜராத்திகள், ராஜஸ்தானிகள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி பகிரங்க மன்னிப்பு கோரினார். மும்பை அந்தேரியில் நடந்த கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, ``மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் மட்டும் இல்லாவிட்டால் பணமே இருக்காது. அதுவும் குறிப்பாக மும்பை, தானேவில் பணமே இருக்காது’’ என்று அவர்களின் வர்த்தக பங்களிப்பு குறித்து பேசினார். இதற்கு காங்கிரஸ், சிவசேனா உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடின உழைப்பாளிகளான மராட்டியர்களை ஆளுநர் அவமதித்து விட்டதாகவும் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில், தனது இத்தகைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு ஆளுநர் கோஷ்யாரி தரப்பில் ராஜ்பவன் அறிக்கை வெளியிட்டது. இதில், தாராள மனம் படைத்த மகாராஷ்டிரா மக்கள் தன்னுடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சை மன்னித்து விடுவார்கள் என்று நம்பிக்கை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Tags:
Gujarati Rajasthani Controversy Comment Maharashtra Governor குஜராத்தி ராஜஸ்தானி சர்ச்சை கருத்து மகாராஷ்டிரா ஆளுநர்மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!