கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியில் மண்டை ஓடு கண்டெடுப்பு: அமெரிக்க பல்கலை. குழு சோதனை
2022-07-31@ 03:04:19

திருப்புவனம்: கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய முதன்முறையாக அமெரிக்க பல்கலைக்கழக நிபுணர்கள் குழு களமிறங்கியுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், கீழடி, அகரம், கொந்தகையில் குழிகள் தோண்டப்பட்டு 800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. கொந்தகை தளத்தில் 4 குழிகளில் இருந்து 54 முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதில் ஒரு சில முதுமக்கள் தாழிகள் தவிர மற்றவை சேதமடைந்துள்ளன. சேதமடையாத தாழிகளை கணக்கிட்டு அதனை திறக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. நிபுணர்கள் முன் முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. மூன்றரை அடி உயர தாழியின் மேற்பகுதி திறக்கப்பட்டு மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன. அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் டேவிட், சிகாகோ பல்கலைகழக பேராசிரியை மானஸா உள்ளிட்டோரின் நேரடி கண்காணிப்பில் ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன். முதுமக்கள் தாழிகளை திறந்து பொருட்களை வெளியே எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
* நீதிபதிகள் பாராட்டு
கீழடி அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியகத்தை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் பிரகாஷ், சுந்தர், சந்திரசேகர், சிவஞானம், நிர்மல்குமார், ஹேமலதா, தாரணி, ஜெயகுமார், ஸ்ரீமதி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அகழாய்வு பணிகள் குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், தொல்லியல் துணை ஆணையர் சிவானந்தத்தை பாராட்டி சால்வை அணிவித்தனர். பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் பாராட்டியதுடன், அவர்களது பெயர்களையும் கல்வெட்டில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு யோசனை தெரிவித்தனர்.
Tags:
Kontakhai site old people's chest skull survey American University. Panel test கொந்தகை தள முதுமக்கள் தாழி மண்டை ஓடு கண்டெடுப்பு அமெரிக்க பல்கலை. குழு சோதனைமேலும் செய்திகள்
பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர்கள் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்: கிருஷ்ணகிரி எஸ்பி பேட்டி
தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் பழநி கோயிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: பறவைக்காவடி எடுத்து வந்து பரவசம்
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தில் முதல் அதிரடி அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை: மலைக்கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும்திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் நேரில் ஆய்வு
வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக்கல் செல்லாது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!