மதுரையில் சாலையோர பட்டாசு கடைகளுக்கு அனுமதியில்லை: காவல்துறை அறிவிப்பு
2022-07-29@ 17:32:30

மதுரை: தீபாவளியையொட்டி மதுரையில் சாலையோர பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது என காவல்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008-ன் படி வெளியிடப்பட்ட விதிமுறைகளின் படி பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து அதனுடன் கடை உரிமையாளரின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று மற்றும் உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் ஆகியவை அந்த விண்ணப்பத்துடன் இணைத்து மதுரை மாநகர காவல்துறை அலுவலகத்தில் 09-09-2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
முழுமையாக அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்து அனைத்து சான்றுகளையும் இணைத்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பத்தில் உள்ள இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு சோதனை நடத்திய பிறகே அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். முக்கியமாக சாலை ஓரங்களில் உள்ள கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை: நீர்வளத்துறை அறிக்கை
பணி நியமனங்களில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது.! முதற்கட்டமாக ஆவணங்கள் ஆய்வு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக ஆதரவு அளிக்கும் கட்சிக்கு ஐஜேகே ஆதரவு: பாரிவேந்தர் பேட்டி
அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!