தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை கடந்தது
2022-07-29@ 00:12:59

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றியஅரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. வரி விதிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. இந்நிலையில், 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலை உயர்ந்தது. 23ம் தேதி ஒரு சவரன் ரூ.37,568, 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 25ம் தேதி ஒரு சவரன் ரூ.37,760, 26ம் தேதி ரூ.37,824 என்றும் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,735க்கும், சவரன் ரூ.37,880 என்றும் விலை உயர்ந்தது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4767க்கும், சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38136க்கும் விற்கப்பட்டது. 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ச்சியாக 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1096 வரை அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256 கோடி மகளிர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் ஆஜராகி விளக்கம்
ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
290 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்
தமிழ்நாட்டில் மொத்தம் 3.38 கோடி வாகனங்கள் உள்ளன: பேரவையில் போக்குவரத்துத்துறை தகவல்
கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரி காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாளில் விடுமுறை தரப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது..!!
உள்நாட்டில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல்
ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டம்
போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி
மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்துக்கு 1,000 நூல்களை வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி..!!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்வுடன் முடிவு..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!