கொடைக்கானலில் தூண்பாறையை மறைத்து கட்டும் ராட்சத சுவரை அகற்றவேண்டும்: வனத்துறைக்கு சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை
2022-07-28@ 15:30:04

கொடைக்கானல்: கொடைக்கானலில் தூண் பாறையை மறைத்து எழுப்பப்படும் ராட்சத சுவரை அகற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் இயற்கை எழில் கொஞ்சும் தூண் பாறையை பார்வையிடவே சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்புவர். மேகங்கள் தவழும் இரண்டு தூண்களை கண்டு ரசித்து, புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் திரண்டு நிற்கும். தற்போது தூண் பாறையை சாலையில் இருந்து பார்க்க முடியாத அளவிற்கு ராட்சத சுவர் ஒன்றை வனத்துறை கட்டி வருகிறது.
இந்த சுவர் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டால் தூண் பாறை முழுவதுமாகவே மறைக்கப்படும். பின்னர் வனத்துறையிடம் டிக்கெட் பெற்று உள்ளே சென்றுதான் தூண் பாறையை பார்க்க முடியும். எனவே ராட்சத சுவரை உடனடியாக இடிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் ராட்சத சுவரை அகற்றவும் வனத்துறைக்கு கண்டனங்கள் தெரிவித்தும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!