கொரோனா, குரங்கம்மைக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் 142 பேருக்கு பன்றிக் காய்ச்சல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
2022-07-26@ 20:56:13

மும்பை: கொரோனா, குரங்கம்மை பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா, குரங்கம்மை பாதிப்புக்கு மத்தியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மும்பையில் 43 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவில் 23 நோயாளிகளுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதியாகி உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் 30 முதல் 35 பேர் பன்றிக் காய்ச்சலால்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஏழு நோயாளிகள் இறந்துள்ளனர்; நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 24ம் தேதி மொத்தம் 1,66,132 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் அதிகரித்து வரும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, மும்பை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் மங்கள கோமரே கூறுகையில், ‘பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால், மாநகராட்சி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டியது போல், பன்றிக் காய்ச்சலிலும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம். பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்க, மக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். குரங்கம்மை நோய் தடுப்புக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!