காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் வடமாநில தொழிலாளி பலி
2022-07-23@ 01:24:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். பீகார் மாநிலம் கட்டோரியா மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் சாந்தி (50). காஞ்சிபுரத்தை அடுத்த மாங்கால் கூட்ரோடு பகுதியில் தங்கி டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த வாரம் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு ஜூலை 19ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு தனது நண்பர் பூரன் மண்டல் (39) என்பவருடன் சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார்.
அங்கிருந்து, காஞ்சிபுரம் வந்த அவர் மாங்கால் கூட்ரோடு செல்ல 20ம் தேதி மாலை பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடன் இருந்த நண்பர் பூரன் மண்டல் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, தினேஷ் சாந்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தினேஷ் சாந்தி மகன் மகேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!