திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துள்ள தள்ளுவண்டி கடைகள்-பொதுமக்கள் அவதி
2022-07-22@ 14:47:25

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக தள்ளுவண்டி கடைகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர் .
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சுமார் ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. இதனை திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டி வியாபாரிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளதால், பேருந்துகள் செல்ல முடியாமல் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் போக்குவரத்து காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி கடைகளுக்கு அபராதம் விதித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!