இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிறை பிடிப்பு
2022-07-22@ 00:37:19

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நள்ளிரவு தனுஷ்கோடி அருகே மீன் பிடித்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். மேலும், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் ஜார்ஜ், அர்ச்சுனன், அஜித்குமார், கிறிஸ்டோபர், லிங்கம் மற்றும் நாகசாமி ஆகிய 6 மீனவர்களை சிறை பிடித்தனர். அவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும் இரவோடு இரவாக தலைமன்னார் துறைமுகத்திற்கு, இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். அங்கு உயரதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:
Sri Lanka Navy atrocities Rameswaram fishermen 6 people jailed இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிறை பிடிப்புமேலும் செய்திகள்
கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீரமைக்க ஆரணி மக்கள் வலியுறுத்தல்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா: பக்தர்கள் தரிசனம்
மண் காப்போம் இயக்கத்திற்காக பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: 50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி
புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,200 காளைகள் ஆக்ரோஷம்: அடக்கப் பாய்ந்த 600 வீரர்கள்
அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றில் ரூ.100 கோடி உயர்மட்ட பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கோரி: சேலத்து இளைஞருக்கு குவியும் பாராட்டு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!