அப்துல்லா ஷபிக் அபார சதம்: பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு
2022-07-20@ 01:49:28

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், 342 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்துள்ளது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 222 ரன், பாகிஸ்தான் அணி 218 ரன் எடுத்து ஆல் அவுட்டாகின. இதையடுத்து 4 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, 3ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்திருந்தது.
சண்டிமால் 86 ரன், பிரபாத் 4 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சண்டிமால் சதத்தை நெருங்கிய நிலையில், பிரபாத் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் நசீம் ஷா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பாகிஸ்தான் 337 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்தது. சண்டிமால் 94 ரன்னுடன் (139 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது நவாஸ் 5, யாசிர் ஷா 3, ஹசன் அலி, நசீம் ஷா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, 342 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 35, அசார் அலி 6, கேப்டன் பாபர் ஆஸம் 55 ரன்னில் வெளியேறினர். அப்துல்லா ஷபிக் 112 ரன், முகமது ரிஸ்வான் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, பாக். வெற்றிக்கு இன்னும் 120 ரன் தேவை என்ற நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
மேலும் செய்திகள்
ரயில்வே தலைமை அலுவலகம் சாம்பியன்
ரஞ்சி கோப்பை காலிறுதி சவுராஷ்டிரா 303 ரன் குவிப்பு: பார்த் பட் அபார சதம்
சில்லி பாயின்ட்...
கடைசி டி20ல் இன்று இந்தியா - நியூசி. மோதல்: தொடரை வெல்லப் போவது யார்?
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் இடம்பெறுவார்; மிட்செல் ஸ்டார்க் சந்தேகம்.! ஆஸி. பயிற்சியாளர் தகவல்
இன்னும் 2 ஆண்டுகள் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்துவார்: பயிற்சியாளர் இவானிசெவிச் நம்பிக்கை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!