நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை!: கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி தண்ணீர் திறப்பு..!!
2022-07-09@ 16:44:26

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள முக்கிய அணைகளான கே.எஸ்.ஆர். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து தற்போது வினாடிக்கு தலா 10,000 கனஅடி வீதம் மொத்தமாக 20,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலையில் கே.எஸ்.ஆர். அணையில் இருந்து சுமார் 3,200 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து சுமார் 4,200 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தினாலும், அணைகள் முழு கொள்ளளவை எட்டிவரும் காரணத்தினாலும் 2 அணைகளில் இருந்தும் நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தொடர் மழையால் இந்த நீர் வெளியேற்றத்தின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 124.80 அடி உயரம் கொண்ட கே.எஸ்.ஆர். அணையில் தற்போது 122 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது.
அணை முழு கொள்ளளவை எட்ட வெறும் 3 அடி மட்டுமே மீதம் இருக்கிறது. அணைக்கு 33 ஆயிரத்திற்கும் மேல் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 10,000 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மறுபுறம் கடல்மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்ட மேலும் 3 அடிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. கபினி அணைக்கு தற்போது 14,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 10,000 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ஊத்துக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!