தோளூர்பட்டி பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
2022-07-08@ 21:36:03

தொட்டியம்: தொட்டியம் அடுத்த தோளூர்பட்டியில் 200 வருடங்களுக்கு பின்னர் தாழைமடலாயி பிடாரி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் தொட்டிம் அடுத்த தோளூர்பட்டியில் உள்ள பிடாரி அம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் ஏதே காரணத்திற்காக திருவிழா தடைபட்டது. இதையடுத்து திருவிழா கொண்டாடப்படவில்லை.
இந்நிலையில் அக்கோயில் குடிபாட்டுக்காரர்கள் ஒன்றுகூடி இந்தாண்டு திருவிழா நடத்த முடிவு செய்து விழா கோலாகலமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், தேர் அலங்காரம் சுவாமி அழைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்தேரில் பிடாரி அம்மன் எழுந்தருளினார்.
தோளூர்பட்டி, உப்பாத்து பள்ளம், முதலிப்பட்டி, இலந்தமடை புதூர், கீழ கார்த்திகை பட்டி மேல கார்த்திகை பட்டி பாலசமுத்திரம் அண்ணா நகர் கணேசபுரம் உள்ளிட்ட 9 ஊர்களுக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு திரு தேரை பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து சென்றனர். பக்தர்கள் பிடாரி அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!