பக்ரீத் பண்டிகையை யொட்டி ஒட்டன்சத்திரம் ஆட்டுசந்தையில்; 2 கோடி ரூபாய்க்கு விற்பனை
2022-07-07@ 18:03:35

ஒட்டன்சத்திரம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.கே.நகரில் அமைந்துள்ள நகராட்சி ஆட்டுசந்தை இன்று அதிகாலை 4 மணி முதல் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் குவிந்தனர்.
திண்டுக்கல் பழனி, வேடசந்தூர், அய்யலூர், கன்னிவாடி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்பனை செய்யவும், வாங்கி செல்லவும் வந்ததால், சந்தை களை கட்ட துவங்கியது. செம்மறி கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், வெள்ளாடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் வெள்ளாட்டு குட்டிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலை அதிகரித்தாலும், காலை 10 மணி வரை ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ஈரோடு கருமுட்டை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!