மதுகுடிக்க பணம் தர மறுப்பு, கட்டையால் நண்பருக்கு அடி; வாலிபர் கைது
2022-07-07@ 17:33:51

அண்ணாநகர்: மதுகுடிக்க பணம் தர மறுத்த நண்பரை கட்டையால் சரமாரியாக தாக்கிய வாலிபரை கைது செய்தனர். சென்னை அமைந்தகரை பி.பி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(52). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது நண்பர் நாகூர்மீரான்(51). இவர் கொத்தனார். நேற்று ரமேஷ் மது குடிப்பதற்காக நாகூர் மீரானிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு நாகூர், ‘’தற்போது என்னிடம் பணம் இல்லை’’ என்று கூறியதால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அங்கு கிடந்த உருட்டுகட்டையை எடுத்து நாகூர் மீரானை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நாகூர்மீரானை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தலையில் 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதுபற்றி நாகூர் மீரான் கொடுத்த புகாரின்படி, அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
லாரி டிரைவர்களிடம் கத்திமுனையில் வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் அருகே கடையில் பதுக்கி விற்பனை செய்த 4,100 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை காவலாளி கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை: நண்பர்கள் 4 பேருக்கு வலை
இறந்த கணவர் மீண்டும் வருவார் என கூறி பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் மோசடி; போலி மந்திரவாதிக்கு வலை: பலரை உயிர்ப்பித்து தந்ததாக கூறி நாடகம்
போலீசுக்கு தெரியாமல் கஞ்சா வாங்கும் இடத்தை சொல்லுங்க...: யூடியூப் மூலம் மாணவிக்கு தகவல் கொடுத்தவர் கைது
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!