ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
2022-07-07@ 16:54:29

ஆவடி: ஆவடியில் நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா பெறுவது, முதியோர் உதவி தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.
எனினும், கடந்த சில மாதங்களாக மக்களின் மனுக்கள்மீது வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன், பட்டா கேட்டு மனு கொடுத்த தன்னை ஒரு வருடத்துக்கும் மேலாக ஆவடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர் என ஒரு பெண் அழுது புலம்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று மாலை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்கள் அளித்த மனுக்களின் எண்ணிக்கை, எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதேபோல், வட்டாட்சியர் அலுவலகத்தின் குறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விசாரித்தார்.
பின்னர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது உடனடி விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். அலட்சியப் போக்குடன் செயல்படும் அதிகாரிகள்மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வில் வட்டாட்சியர் சிவகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
மாமல்லபுரத்தில் பட்டம் விடும் விழா தொடங்கியது: இன்று முதல் 3 நாட்களுக்கு விழா நடைபெற உள்ளது...
தேவையில்லாமல் அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
வில்லிவாக்கத்தில் கலைஞரின் நினைவு தின பொதுக்கூட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு
ஒரேயொரு பட்டப்படிப்புடன் மாணவர்கள் நிறுத்தக்கூடாது.! கல்வி, மருத்துவ படிப்புகளுக்காக பல திட்டம் செயல்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சுக்குபாய் பிரியாணி உணவகம் அரங்கு அமைக்க முன்வந்ததை அடுத்து சென்னை தீவு திடல் உணவுத்திருவிழாவுக்கு பீப் பிரியாணிக்கு அனுமதி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!