மூணாறில் நிற்காமல் கொட்டுது கனமழை சாலைகளில் மண் சரிந்து போக்குவரத்து துண்டிப்பு
2022-07-07@ 16:33:55

மூணாறு: மூணாறில் தொடரும் கனமழையால், சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம், மூணாறில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. கனமழையால், கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான மூணாறு - தேவிகுளம் சாலையில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் காவல் நிலையம் அருகே சாலையில் நேற்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர், மண் அள்ளும் ேஜசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு, மண் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது. சாலையில் போக்குவரத்து இல்லாத நேரத்தில், மண் சரிவு ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் கூறினர். மேலும், மூணாறு சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் மழை, தொடர்ந்தால் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ள பகுதிகளை முறையாக கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மூணாறு சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேணடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!