பென்னாகரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் விரட்டியடித்தனர்
2022-07-07@ 16:33:32

தர்மபுரி: பென்னாகரம் அருகே வனத்தை ஒட்டிய கிராமத்திற்குள் புகுந்த 2 யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டுவனஅள்ளி ஊராட்சி பவளந்தூர் கிராமத்தை ஒட்டி ஒகேனக்கல் வனப்பகுதியின் ஒருபகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானைகள் வெளியேறி வனத்தை ஒட்டிய கிராமங்களிலும், விளை நிலங்களிலும் நுழைவது வழக்கம். இந்நிலையில், நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் பவளந்தூர் கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர் அங்குள்ள விளை நிலங்களில் நுழைந்தது.
நேற்று காலை விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் விளை நிலங்களில் நடமாடிய யானைகளை பார்த்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் விரைந்து சென்று, அருகில் உள்ள வனப்பகுதிக்கு யானைகளை விரட்டினர். தற்போது பவளந்தூர் வனப்பகுதியில் 2 யானைகளும் முகாமிட்டுள்ளன. மீண்டும் அந்த யானைகள் கிராமங்களில் நுழையவும், விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு இடம்பெயர செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!