பந்தலூர் அருகே உணவு தேடி வந்து வீட்டை சூறையாடிய காட்டு யானை: மக்கள் அச்சம்
2022-07-07@ 15:48:22

பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அட்டி பகுதியில் காட்டு யானை வீட்டை உடைத்து சேதம் செய்தது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டி சேலகட்டை பகுதியில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புக்குள் நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளி நாகலிங்கம் (60) என்பவர் வீட்டின் சமையலறையை உடைத்து சேதம் செய்து சமையறையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும் வெளியேஇழுத்து ருசித்து சேதம் செய்தது.இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாகலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்த கூச்சலிட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் யானையை விரட்டியுள்ளனர். சிறிது நேரம் அப்பகுதியில் முகாமிட்ட யானை அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது.
பொதுமக்கள் கூறுகையில், ‘‘தேவாலாட்டி, கைதுக்கொல்லி, தேவாலா பஜார், வாழவயல், பாண்டியார் போன்ற பகுதிகளில் ஒற்றை யானை நாள்தோறும் குடியிருப்புகளை தாக்கி சேதம் செய்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம்.
பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் சுற்றித்திரியும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானை சேதப்படுத்தியுள்ள வீட்டிற்கு வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் நீர்திறப்பு அதிகரிப்பு; நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
பேச்சிப்பாறையில் இன்று உலக பழங்குடியினர் தின விழா: அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
சாரல் திருவிழாவின் இன்று 5ம் நாள் கொண்டாட்டம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சைக்கிள் மாரத்தான் போட்டி; ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கையடக்க கணினியை கொண்டு 185 ரயிலில் டிக்கெட் பரிசோதனை: சேலம் கோட்டத்திற்கு 124 கருவி வழங்கல்
நெல்லை-ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்படுமா?..தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
கமுதி அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் நடுகல் கண்டெடுப்பு
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!