கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
2022-07-07@ 14:58:53

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு கோழிக்கோடு உள்பட பெரும்பாலான வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தென் மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா தவிர ஏனைய 11 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று கண்ணூர், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் செய்திகள்
கொரோனா பரவல் ஆபத்து; பண்டிகை நெருங்குவதால் எச்சரிக்கை தேவை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
ஒரே நேரத்தில் 110 மாணவர்களுக்கு காய்ச்சல்: சட்டீஸ்கர் பள்ளியில் விசாரணை
பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா
ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்குவது அரசின் கடமை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
விமானத்தின் கழிவறையில் கிடந்த ‘டிஷ்யூ’ பேப்பரில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வாசகம்: பெங்களூருவில் பரபரப்பு
மகாராஷ்டிராவில் ஏக்நாத் தலைமையிலான புதிய அரசில் பாஜக - 9; சிவசேனா - 9 அமைச்சர்கள் பதவியேற்பு : 40 நாட்களாக நடந்த இழுபறி முடிவுக்கு வந்தது
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!