பாஜக குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அப்பாஸ் நக்வி?.. அடுத்தடுத்து 2 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமாவால் பரபரப்பு
2022-07-06@ 17:34:11

டெல்லி: அடுத்தடுத்து 2 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடையும் நிலையில் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்தார்.
ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்தும் விளக்கினார் முக்தார் அப்பாஸ் நக்வி. பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார் அப்பாஸ் நக்வி. இவரின் ராஜினாமாவை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாஜகவின் சார்பில் எந்த ஒரு இஸ்லாமிய எம்பி.யும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு துணை தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் முக்தார் அப்பாஸ் நக்வி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒன்றிய எஃகு துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியில் இருந்து விலகினார்.
ஆர்.சி.பி.சிங்-கின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிந்த நிலையில் ஒரே நாளில் 2 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!