முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
2022-07-06@ 15:50:12

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியை ஒட்டி ஒரே சமுதாயத்தை சேர்ந்த இருவேறு கிராமத்தினர் மோதி கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குத்தூரில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கபடி போட்டியில் கீழக்கன்னிசேரி அணி தோல்வியடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த கீழக்கன்னிசேரி கிராமத்தினருக்கும், விளங்குத்தூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள கிராமத்தினர் இருதரப்பையும் சமரசம் செய்து வைத்துள்ளனர். இதனிடையே பேருந்தில் என்ற விளங்குத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்களை மறித்த கீழக்கன்னிசேரி கிராமத்தினர், தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விளங்குத்தூரை சேர்ந்தவர்கள் வயல்வெளிக்கு சென்ற எதிர்தரப்பினரை கம்பு, ஆயுதங்களுடன் தாக்க முயன்றதால் பதற்றம் உருவானது. தகவல் அறிந்த முதுகுளத்தூர் போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று பேச்சுநடத்தி, இருதரப்பினரையும் அமைதிபடுத்தினர். பின்னர் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவிப்பு
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!