நாகை அருகே இரு மீனவ கிராமங்கள் இடையே கடும் மோதல்: 2 கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கைது
2022-07-06@ 10:45:16

நாகை: நாகை அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல், வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கி, சூறையாடியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேலபட்டினச்சேரி மற்றும் கீழ்ப்பட்டினச்சேரி மீனவர்களிடையே மோதல் நிலவி வருகிறது. மீன்பிடி துறைமுகத்தில் சமஉரிமை கேட்டு, மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மேலபட்டினச்சேரி மீனவர்களுக்கும் மீன்விற்பனை மற்றும் ஏலம் விடுவதற்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ் மற்றும் மற்றொரு சுரேஷ் ஆகியோர் மீது மற்றொரு தரப்பு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்றிரவு, நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலபட்டினச்சேரி மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலபட்டினச்சேரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஊருக்குள் யாரும் இல்லையென்பதை அறிந்த வன்முறை கும்பல், அங்கு புகுந்து, வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியது. அந்த கும்பல் வாகனங்களை அடித்து நொறுக்கியும், கற்களை வீசியும் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தொடர்ந்து மேலபட்டினச்சேரி மற்றும் கீழ்ப்பட்டினச்சேரி மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. நாகை எஸ்.பி.ஜவகர் தலைமையில் அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் 2 பேருக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மோதல் காரணமாக 2 கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரி கடற்கரை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கையும் களவுமாக சிக்கினர்
புதுச்சேரி கன்னியகோயில் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நெய்வேலியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது-6.5 கிலோ பறிமுதல்: பொறி வைத்து பிடித்த போலீஸ்
கோபி அருகே சந்தன மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளி அதிரடி கைது-4 கிலோ பறிமுதல்; விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலம்
சிறுவன் ஓட்டி சென்ற பைக் மோதி 3 வயது சிறுமி பரிதாப பலி: தந்தை அதிரடி கைது
டோல்கேட்டில் தாமதம் தட்டிக் கேட்டவர் மீது சரமாரியாக தாக்குதல்
ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியிடம் டிஐஜி கிடுக்கிப்பிடி விசாரணை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!