பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 இளைஞர்கள் கைது
2022-07-06@ 00:41:59

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அடுத்த மணிமங்கலம் போலீசார் கரசங்கால் பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 3 இளைஞர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் 3 இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கரசங்கால், அண்ணா தெருவை சேர்ந்த பூணைக்கண் வினோத் (20), ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி பகுதியை சேர்ந்த வாண்டு விஜய் (எ) விஜய் (19), அய்யப்பந்தாங்கல், ஆயில் மில் சாலையைப்சேர்ந்த சூரியமூர்த்தி (18) என்பது தெரியவந்தது. மேலும், விசாரணை நடத்தியதில் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 11 சவரன் நகை, 3 பைக், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 3 பேரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
கேரளாவில் ரயிலில் கடத்திய ரூ.10 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது
நேற்று சிகரெட்; இன்று சரக்கு: சிக்கிய பாடி பில்டர்
ஆன்லைன் ரம்மியால் கடன்: சொந்த வீட்டில் 50 பவுன் திருடிய பாதிரியார் மகன்
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி அதிமுக பிரமுகர் கைது: திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
அதிமுக ஆட்சியில் போலி பில் தயாரித்து முறைகேடு நெல் கொள்முதல் மோசடியில் ஈடுபட்ட மண்டல அதிகாரி உட்பட 3 பேர் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!