தமிழக கோயில்களில் அன்னை தமிழில் வழிபட 1,500 பேர் பதிவு: அறநிலையத்துறை தகவல்
2022-07-06@ 00:32:06

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘அன்னை தமிழில்’ வழிபாடு ெசய்ய பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தினசரி 150 பக்தர்களும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 140 பக்தர்களும், பழநி தண்டாயுதபணி சுவாமி கோயிலில் 200 பக்தர்களும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 180 பக்தர்களும், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் 54 பக்தர்களும், கோவை, தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோயிலில் 50 பக்தர்களும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் 40 பக்தர்களும், பண்பொழி, திருமலை குமாரசுவாமி கோயிலில் 38 பக்தர்களும், கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் 33 பக்தர்களும், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 66 பக்தர்கள் உள்பட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும், சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னை தமிழில் வழிபாடு செய்ய பதிவு செய்து வருகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
ஷோ ரூமில் இருந்து ஓட்டி பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச் சென்ற நபர் எஸ்கேப்: “வடிவேலு காமெடி நிஜமானது’’
எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.!
மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட 13ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டுபிடிப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை போக்குவரத்து மாற்றம்
மூவண்ணக் கொடியைப் போற்றுவோம்.! மூட அரசியல்தனத்தை அடக்குவோம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!