மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது
2022-07-05@ 18:38:18

திண்டிவனம்: திண்டிவனம் அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய மாணவனை போலீசார் கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தால், சிறுமி 9 மாத கர்ப்பமானார். இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் கிடைத்தது. சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி சிறுமியை மீட்டு விழுப்புரம் சமூக நலத்துறையிடம் ஒப்படைத்தார்.
பின்னர் சமூக நலத்துறை மூலம் புகார் பெறப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவனை திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
3 குழந்தைகளை கொன்ற தாய் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது
கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு உயர் ரக போதை மருந்து விற்ற 3 பேர் கைது: 3 பைக்குகள் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் நகைக்கடையை உடைத்து 281 பவுன், 30 கிலோ வெள்ளி கொள்ளை; விவசாய நிலத்தில் வைத்து பங்கு பிரித்தனர்
கள்ளக்காதலால் குடும்ப தகராறு என்எல்சி ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை; மகளின் காதலனுடன் சேர்ந்து மனைவியே வெறிச்செயல்
ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்த முயற்சி: கீழே குதித்து தப்பினார்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!