தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
2022-07-05@ 17:09:05

சென்னை: தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(எ)பாட்ஷா(18). இவர் பள்ளிக்கரணையை சேர்ந்த தனது நண்பர் முத்து என்பவருடன் சேர்ந்து டிடிகே சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டார். அப்போது பாட்ஷா தண்ணீர் தொட்டிக்குள் சென்று பணியில் ஈடுபட்டார். தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற மின்மோட்டர் போட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பாட்ஷா மின்சாரம் பாய்ந்து தண்ணீர் தொட்டிக்குள் சுருண்டு விழுந்தார். உடனே அவரது நண்பர் முத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பாட்ஷாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அதைதொடர்ந்து சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு எதிரொலி அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
மாமல்லபுரத்தில் நரிக்குறவர்கள் 3 பேருக்கு கடைகள்; கலெக்டர் ஆணை
ஆளுநர், தலைவர்கள் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு கனடா பயணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...