நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு
2022-07-05@ 01:08:51

நெல்லை: நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் வரலாற்று சான்றுகள் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. ஊரின் கீழ் எல்கையான செல்வி அம்மன் கோயில் அக்காலத்தில் வீரபாண்டியன் செல்வியம்மன் கோயில் என அழைக்கப்பட்டது. அதாவது வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னரின் மகளான செல்வியின் பெயரில் உருவான கோயில் என குறிப்பிடப்படுகிறது.
முன்னீர்பள்ளம் வட்டாரத்தில் பூதலவீரர் என்னும் மன்னரின் உருவம் பொறித்த செப்புக்காசுகளும் ஏற்கனவே கிடைத்தன. இந்நிலையில் முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுகள் பழமையான ஒரு செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 123 வரிகள் உள்ளன. முதல் 106 வரிகளில் வாசகங்கள் உள்ளன. 107 முதல் 114 வரை வடமொழி இலக்கணம் காணப்படுகிறது. அதன் பின்னர் 115 முதல் 123 வரையிலான வரிகளில் அந்தணர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
Tags:
Nellai Munneerpallam 480 years copper finds நெல்லை முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டு செப்பேடு கண்டெடுப்புமேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!