திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்
2022-07-05@ 01:06:26

திருச்சி: திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.31.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி நீதிமன்றம் அருகே பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றது. இதையடுத்து நேற்று மாலை போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, ஊழியர்கள் அனைவரையும் உள்ளேயே இருக்க உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், உதவி பொறியாளர் கந்தசாமி அறையில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.31.26 லட்சத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையின்போது, இந்த பணம் நடந்த பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வைத்திருந்ததாக கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து அலுவலக கணக்குகளை சரிபார்த்தனர். திருவானைக்காவலில் உள்ள கந்தசாமி வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
Tags:
Trichy Public Works Department Office Vigilance Raid திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டுமேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!