திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை
2022-07-05@ 01:05:16

சேலம்: திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு போலியாக தரிசன டிக்கெட் வழங்கியதாக சேலத்தை சேர்ந்த டூரிஸ்ட் உரிமையாளரிடம் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தினர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்த கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பல மணிநேரம் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டண டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலத்தை சேர்ந்த ஒருவர் தரிசனம் செய்ய திருப்பதிக்கு கட்டண டிக்கெட் கொண்டு சென்றார். அங்கு அதனை பரிசோதித்தபோது அது போலி டிக்கெட் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, திருமலா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சேலத்தை சேர்ந்த அந்த பக்தரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சேலம் 2வது அக்ரஹாரத்தில் உள்ள டூரிஸ்ட் அலுவலகத்தில் இருந்து தனக்கு இந்த கட்டண தரிசன டிக்கெட் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று திருமலா போலீசார் சேலம் வந்தனர். அவர்கள் 2வது அக்ரஹாரத்தில் உள்ள டூரிஸ்ட் அலுவலகத்தில் உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து விசாரிக்க அவரை திருப்பதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Tags:
Tirupati Fake Darshan Ticket Salem Tourist Company Andhra Police Investigation திருப்பதி போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவன ஆந்திர போலீசார் விசாரணைமேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!