வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் கைது
2022-07-03@ 00:58:07

திருவொற்றியூர்: பூந்தமல்லி வரதாபுரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (58). இவர், தனது பட்டதாரி மகனுக்கு அரசு வேலை தேடி வந்தார். அப்போது, திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த இவரது நண்பர் ஹரிகிருஷ்ணன் (56), தனக்கு அரசு துறைகளில் அதிகாரிகளை தெரியும். பணம் கொடுத்தால், உனது மகனுக்கு வேலை வாங்கி தருகிறேன், என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய துரைரஜ், ரூ.13 லட்சத்தை ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். ஆனால், 3 ஆண்டுகளாகியும் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதனால் துரைராஜ், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு தர முடியாது என்று அவர் மறுத்துள்ளார். இதையடுத்து ஹரிகிருஷ்ணன் மீது திருவொற்றியூர் போலீசில் துரைராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார், ஹரிகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை நடந்த 72 மணி நேரத்தில் 4 குற்றவாளிகளை கைது செய்து போலீஸ் அதிரடி..!
வடிவேலு பட பாணியில் ஓட்டி பார்ப்பதாக கூறி ஜீப் அபேஸ்
சின்னசேலம் பள்ளி கலவரத்தில் மாடுகளை திருடிய 3 பேர் கைது
திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸ் வாகனம் மீது தாக்குதல்
கடலூர் பாடலீஸ்வரர் கோயிலின் கோபுர உச்சியில் அனுமதியின்றி தேசியகொடி ஏற்றிய பாஜவினர்
பாரத மாதா கோயில் பூட்டை உடைத்த விவகாரம் பாஜ துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!