6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது
2022-07-03@ 00:57:18

புதுடெல்லி: நாடு முழுவதும் 6 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென் பருவமழை வழக்கமாக நாடு முழுவதும் ஜூலை 8ம் தேதி தொடங்கும். ஆனால், இந்தாண்டு பெரும்பாலான மாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கி விட்டது. ராஜஸ்தான், குஜராத்தில் மட்டும் மழை இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் முதல் இங்கும் பருவ மழை பெய்ததால், தென்மேற்குப் பருவமழை சாதாரண தேதிக்கு 6 நாட்களுக்கு முன்பாகவே நாடு முழுவதும் தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 4 வார இடைவேளைக்கு பின்னர் கேரளாவில் தற்போது மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வரும் 5ம் தேதி வரை கேரளா முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் செய்திகள்
கொரோனா பரவல் ஆபத்து; பண்டிகை நெருங்குவதால் எச்சரிக்கை தேவை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
ஒரே நேரத்தில் 110 மாணவர்களுக்கு காய்ச்சல்: சட்டீஸ்கர் பள்ளியில் விசாரணை
பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா
ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்குவது அரசின் கடமை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
விமானத்தின் கழிவறையில் கிடந்த ‘டிஷ்யூ’ பேப்பரில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வாசகம்: பெங்களூருவில் பரபரப்பு
மகாராஷ்டிராவில் ஏக்நாத் தலைமையிலான புதிய அரசில் பாஜக - 9; சிவசேனா - 9 அமைச்சர்கள் பதவியேற்பு : 40 நாட்களாக நடந்த இழுபறி முடிவுக்கு வந்தது
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!