வால்பாறையில் ஊருக்குள் புகுந்து 3 வீடுகளை இடித்து சூறையாடிய காட்டு யானை கூட்டம்
2022-07-02@ 12:44:30

*பொதுமக்கள் அச்சம்
வால்பாறை : வால்பாறையை அடுத்து உள்ளது முத்துமுடி எஸ்டேட். இதன் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் கூட்டம் நேற்று முன்தினம் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் புகுந்தது. இந்த பகுதியில் இருந்த ஆளில்லாத குடியிருப்புகளை இடித்து தள்ளியது. ஜன்னல், கதவு உள்ளிட்டவைகளை நொறுக்கிய யானைகள் அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
இதில் 3 வீடுகள் சேதம் அடைந்தன. நேற்று காலை அந்த பகுதி மக்கள் எழுந்து பார்த்தபோது 3 வீடுகளை யானைகள் இடித்து தள்ளியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கவர தன்னார்வ அமைப்பு புது முயற்சி...
ஈரோடு கருமுட்டை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!