காஞ்சிபுரம் அருகே குருபகவான் கோயில் கும்பாபிஷேகம்
2022-07-02@ 00:03:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பிரகஸ்பதி என்கிற குரு பகவான் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரகஸ்பதி என்கிற குரு பகவான் கோயில் தனி சன்னதியாக நட்சத்திர விநாயகர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாரை குரு பகவானின் இடது தொடையில் அமர்ந்து யானை வாகனத்தில் மீதேறி தம்பதி சமேதராய் அருள் பாலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, 2ம் கால யாக பூஜை, விசேஷ திரவ்யாஹூதி, யாத்ரா தானம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர், இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கவர தன்னார்வ அமைப்பு புது முயற்சி...
ஈரோடு கருமுட்டை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!