பழநி அருகே கொடூரம், நாயை தலைகீழாக தொங்கவிட்டு டார்ச்சர்; வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
2022-07-01@ 18:24:35

பழநி: பழநியில் டூவீலரில் செல்லும் வாலிபர்கள் நாயை தொங்க விட்டபடி டார்ச்சர் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதில் பழநி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலரில் 2 வாலிபர்கள் செல்கின்றனர். பின்னால் அமர்ந்திருக்கும் வாலிபர், நாய் ஒன்றை தலைகீழாக தொங்க விட்டபடி பிடித்து செல்கிறார். மேலும், நாயை அங்குமிங்கும் வீசியபடி பெரியகடை வீதி வரை செல்கின்றனர்.
இதனை பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் படம் பிடித்துள்ளார். டூவீலரில் சென்ற வாலிபர்கள் இருவரும் போதையில் இருந்ததாக தெரிகிறது. நாயை வாலிபர்கள் டார்ச்சர் செய்யும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாலிபர்களின் இச்செயலுக்கு பொதுமக்கள், விலங்கின ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வாலிபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
லாரி டிரைவர்களிடம் கத்திமுனையில் வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் அருகே கடையில் பதுக்கி விற்பனை செய்த 4,100 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை காவலாளி கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை: நண்பர்கள் 4 பேருக்கு வலை
இறந்த கணவர் மீண்டும் வருவார் என கூறி பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் மோசடி; போலி மந்திரவாதிக்கு வலை: பலரை உயிர்ப்பித்து தந்ததாக கூறி நாடகம்
போலீசுக்கு தெரியாமல் கஞ்சா வாங்கும் இடத்தை சொல்லுங்க...: யூடியூப் மூலம் மாணவிக்கு தகவல் கொடுத்தவர் கைது
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!