திரவுபதி முர்மு நாளை சென்னை வருகை
2022-07-01@ 00:04:36

சென்னை: பாஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை சென்னை வந்து, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார். பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். அவர்நேற்று சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.
இந்நிலையில் பாஜ சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு நாளை சென்னை வருகிறார். இங்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சிகளான பாமக தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜவினர் செய்கின்றனர்.முன்னதாக, புதுச்சேரிக்கு செல்லும் திரவுபதி முர்மு அங்குள்ள கூட்டணி எம்எல்ஏக்களை சந்தித்து பேசுகிறார்.
மேலும் செய்திகள்
பைக் மீது அரசு பஸ் மோதி 2 ஐடி ஊழியர்கள் படுகாயம்
சென்னை ஓ.எம்.ஆரில் காவேரி மருத்துவமனையின் ஹம்சா ரீஹேப் மையம்: நடிகர் விக்ரம் துவக்கி வைப்பு
வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை 6 முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு: செல்போன் சிக்னல் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை
கோயில் திருவிழாவில் தாக்கியதால் முன்விரோதம் சிறையில் இருந்து வெளியே வந்த 2 நாளில் ரவுடி வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நந்தனம் கல்லூரியில் 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழா: ஜெகத் கஸ்பர் பேட்டி
தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம் : ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!