திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் யாருக்கும் கொரோனா இல்லை; கல்லூரி முதல்வர் தகவல்
2022-07-01@ 00:04:26

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு கிடையாது என்று அக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சன் கூறியதாவது; திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் மிகச் சிறப்பாக படித்து வருகிறார்கள்.
எந்த ஒரு மாணவர்களுக்கும் கொரோனா நோய் தொற்றோ, கொரோனா நோய் அறிகுறிகளோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதலின்படி மாணவர்கள் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள்
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் நீர்திறப்பு அதிகரிப்பு; நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
பேச்சிப்பாறையில் இன்று உலக பழங்குடியினர் தின விழா: அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
சாரல் திருவிழாவின் இன்று 5ம் நாள் கொண்டாட்டம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சைக்கிள் மாரத்தான் போட்டி; ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கையடக்க கணினியை கொண்டு 185 ரயிலில் டிக்கெட் பரிசோதனை: சேலம் கோட்டத்திற்கு 124 கருவி வழங்கல்
நெல்லை-ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்படுமா?..தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
கமுதி அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் நடுகல் கண்டெடுப்பு
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!