தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் மொபட் செல்போன் திருட்டு
2022-07-01@ 00:01:13

சென்னை: ஆயிரம் விளக்கு பண்டாரி சாலையை சேர்ந்த கோமதி (28), திருவல்லிக்கேணியில் உள்ள காஸ் ஏஜென்சி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு அண்ணாசாலை உம்முடி பங்காரு நகைக்கடை அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு அங்குள்ள நாய்களுக்கு உணவு அளித்துள்ளார்.அப்போது, அருகில் தனது மொபட்டை சாவியுடன் நிறுத்தி இருந்தார். அதில், அவரது செல்போனும் இருந்துள்ளது. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது செல்போனுடன் மொபட் மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த கோமதி இதுபற்றி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
யானை தந்தத்துடன் வாலிபர் கைது
போதைப் பொருள் கொடுத்து அடிமையாக்கி 20 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: கேரளாவில் 9ம் வகுப்பு மாணவன் கைது
அம்பத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.12 கோடி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பில்டருக்கு விற்பனை: 3 பேர் கைது; 6 பேருக்கு வலை
பேடிஎம்மின் கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை மாற்றி பணம் மோசடி; ஊர்க்காவல் படை வீரர் கைது
முட்டுக்காடு பண்ணை வீட்டில் பயங்கரம்: மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை முயற்சி
உடலில் சூடு வைத்த கொடூரம் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!