அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
2022-06-30@ 03:38:45

சென்னை: கடந்த 2002-06ம் ஆண்டில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரியில் அமலாக்கத்துறை முடக்கியது.
இதையடுத்து, அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கப் பிரிவு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று நீதிபதிகள், அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க ஜூலை 14ம் தேதி வரை அவகாசம் வழங்கினர். அதுவரை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு: ஊறுகாய், ஜாம், எண்ணெய் பாட்டில் எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை
44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கோலாகலமாக தொடங்கியது
சென்னையிலுள்ள 148 பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
50, 100 சதுர அடி ஆக்கிரமிப்பை அகற்ற செல்லும்போதெல்லாம் சாஸ்த்ரா பல்கலையின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வாருங்கள் என்று பொதுமக்கள் எதிர்ப்பு
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!